Saturday, January 5, 2008

Iruvar - Unnodu...!


உன்னோடு நன் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்

மரணப் படுகையிலும் மறக்க்து கண்மணியே




தொண்ணுறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம்தான்

எண்ணுறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி




பார்வையிலே சில நிமிடம்

பயத்தோடு சில நிமிடம்




கட்டியணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்

இலக்கணமே பாராமல் எல்லா

இடங்களில் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்




எது நியாயம் எது பாவம்

இருவருக்கும் தோன்றவில்லை




அது இரவா அது பகலா

அதுபற்றி அறியவில்லை




யார் தொடங்க யார் முடிக்க

ஒரு வழியும் தோன்றவில்லை




இருவருமே தொடங்கிவிட்டோம்

இதுவரைக்கும் கேள்வியில்லை




அச்சம் கலைத்தேன் ஆசையினை நீ அனைத்தாய்

ஆடை கலைத்தேன் வெட்கத்தை நீ அனைத்தாய்




கண்ட திருக்கோலம் கனவாக மறைத்தாலும்

கடைசியிலே அழுத கண்ணீர்

கையில் இன்னும் ஒட்டுதடி

...........................!!!


உன்னோடு நன் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்

மரணப் படுகையிலும் மறக்க்து கண்மணியே

No comments: